என் காதல் சந்தியா

காதல் சொல்ல வந்தியா என்னை நீ கண்டியா
சொல்லாம போனியா என்னோட சந்தியா,

காதல் ஒன்று வந்தாலே மனம் காற்றுபோல் லேசாகும்
அங்க இங்க நிக்காம அலைபோல தள்ளாடும்,

காத்திருக்கேன் உனக்காக காதில் வந்து சொல்வாயா
என்னை கண்டு மனம் துள்வாயா,

மார்கழி மாசத்தில பூக்கிற பூ போல
எப்போதும் ஈரம்தான் நம் காதல் வேதம் தான் ,

காதலில் கூடாது மனம் காயம்பட கூடாது
காட்டாறு வெள்ளமெல்லாம் கடல்போய் சேராது,
அன்பே சந்தியா
பூங்காற்று கண்டியா இது புதுப்பாட்டு சந்தியா
உன்ன தாலாட்ட தருவியா தலை கோதிவிடுவியா ,

காதல் ஒரு விளையாட்டு வெற்றி
தோல்வி இரண்டும் இல்ல
கல்யாணத்தோட மட்டும் காதல் அது முடிவதில்ல ,

இனிக்கும் காதல் அது உள்ளத்தில நீயும் வந்து
உக்காந்து கதை படிக்க ஒன்னு ஒன்னா நான் ரசிக்க
உறக்கம் விழி அழைக்க உறவுக்கு மனம் அழைக்க
அன்நேரம் இருவருக்கும் ஆனந்தம் பெருக்கேடுக்க
உன்னையே நான் நினைக்க என்னத்தான் நீ நினைக்க
நம் காதல் ஊற்றேடுக்கும் நலமோடு நாம் இருக்க ,,,,,,®written by:raja

எழுதியவர் : ராஜா (29-Jul-15, 2:46 am)
சேர்த்தது : ராஜா
Tanglish : en kaadhal Sandhiya
பார்வை : 394

மேலே