உடம்பும் சடம்பும் சிலேடை
" உடம்பும் சடம்பும் " (சிலேடை) (சடம்பு == கயிறு )
****************************************************
1. உடம்பு உதவ சடம்பு தாவும்
2. சடம்பு தாவ உடம்ப (அ ) விழும்
3. உடம்ப (அ )விழ சடம் ஏகும்
4. சடம் ஏகி சடம் ஏகும் !
5. சடம் ஏக சடம் ஆகும்
6. சடம் ஏகி கடம் ஏகும்
7. கடம் ஏகி கட(ல்)ம் ஏகும்
8. கட (ல்)ம் ஏகி தடம் மாறுமே !!!
( இஃது சிலேடையாக புனையப்பட்டது . சிலேடை விளக்கம் பின்வருமாறு )
வரி 1. ல் = சடம்பு தாவும் = கயிறு தயாராகும் (உடம்பின் உதவியால் கயிறு தயார் ஆகும்
வரி 2 ல் = சடம்பு தாவ = காலனின் பாசக்கயிறு நம் மீது தாவி வருதல் குறித்தது (அதாவது
கலனின் பாசக்கயிறு நம் மீது விழ உடல் அழியும்)
வரி 3 ல் = சடம் ஏகும் = சடலமாக ஆகும் என குறித்தது
வரி 4 ல் = சடம் ஏகி சடம் ஏகும் = என்பது சடலமானது சட்டம் எனும் விரகுக்குவியலில் ஏறும்
என பொருள் கொண்டது
வரி 5 ல் = சடம் ஏக = சடலம் வேக என்றும் , சடம் ஆகும் என்பது வெந்தபின்பு நீர்த்த சாம்பல்
ஆகும் என்றும் பொருள் பட்டது
வரி 6 ல் =சடம் ஏகி ------- பொருள் = நீர்த்த சமபலனது
கடம் ஏகும் ------பொருள் = கடம் எனப்படும் மண்கலயத்தில் சேரும் எனப்பட்டது
வரி 7 ல் = கடம் ஏகி ----- பொருள் = கலயத்திலிருந்து வெளிவந்து
கடம் ஏகும் ------பொருள் = கடல் நோக்கி செல்லும் எனப்பட்டது
வரி 8 ல் = கடல் ஏகி ------- பொருள் = கடலில் கரைந்து
தடம் மாறுமே ----- பொருள் = பிறவி சுழர்ச்சியை குறித்தது