எதற்கு இந்த தனிமை

ஒரு நொடியில் உலகம்
உன்வசம் வேண்டுமா - தனிமையுடன் கரம் கோர்த்திடு!
நீ யார் என்பதை நீயே உணர வேண்டுமா -
தனிமையில் உன்னை அலசிடு!
பூஜ்ஜியத்தின் இடைவெளியிலும் வாழ வேண்டுமா -
தனிமையிடம் நீ கலைபயிலு!
வாழ்வின் சூட்சுமத்தை நுகர வேண்டுமா -
தனிமையுடன் காதல் கொள்!
நெடுதூர பயணம் நொடியில் முடிய வேண்டுமா -
தனிமையை துணையாக்கு!
ஏமாற்றம் எதுவென அறியாமல் இருக்கவேண்டுமா -
தனிமையுடன் மட்டும் உறவாடிடு!
மனித குலத்தினின்று உன்னை வேரறுக்க அல்ல தனிமை -
வேரூன்றவே தனிமை...!!!!