எதற்கு இந்த தனிமை

ஒரு நொடியில் உலகம்
உன்வசம் வேண்டுமா - தனிமையுடன் கரம் கோர்த்திடு!

நீ யார் என்பதை நீயே உணர வேண்டுமா -
தனிமையில் உன்னை அலசிடு!

பூஜ்ஜியத்தின் இடைவெளியிலும் வாழ வேண்டுமா -
தனிமையிடம் நீ கலைபயிலு!

வாழ்வின் சூட்சுமத்தை நுகர வேண்டுமா -
தனிமையுடன் காதல் கொள்!

நெடுதூர பயணம் நொடியில் முடிய வேண்டுமா -
தனிமையை துணையாக்கு!

ஏமாற்றம் எதுவென அறியாமல் இருக்கவேண்டுமா -
தனிமையுடன் மட்டும் உறவாடிடு!

மனித குலத்தினின்று உன்னை வேரறுக்க அல்ல தனிமை -
வேரூன்றவே தனிமை...!!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (25-Aug-15, 1:14 pm)
பார்வை : 925

மேலே