தனிமைக் களம் - சந்தோஷ்

இரவின் கருமைத்தகிப்பில்
நிசப்தம் பரவிய
எனதறையின் மூலையிலிருக்கும்
ஒரு நாற்காலியில்
வெம்பியவாறு கவிதையென்பதாக
சிந்திக்கொண்டுகிறது
ரணத் துயரங்களை
எனது விரல்கள்....!

***
களிம்பாக
எனது ரணத்தில்
பூசி மகிழ்ந்துவிடுகிறேன்
கவலைக் கத்தியில்
கிழிக்கப்பட்டு வெளியேறிய
எனது குருதித்துளிகளை..!

****

ஏற்படவிருக்கும் மனப்பிறழ்வுப்
பேரலைகளை தடுத்துவிடுகிறது
எனக்குள்ளிருக்கும் இந்த
கவிதை பேரின்பச்சுவர்..!

***

நீளும் இந்த
வாழ்வுக் கொடியில்
கொத்து கொத்தாக
தொங்கிக்கொண்டிருக்கிறது
எனது தோல்விப்பிசாசுகள்.

இயற்கைக்கு
இலையுதிர்காலம் போல
என்னால்
இவைகளுக்கு
கொலையுதிர்காலமிருக்கும்.

காத்திருக்கிறேன்.


**

மெளனத்தின் ஆயுதங்கொண்டு
கவிதைப்போர் புரிகிறேன்.
தினமும்.. நித்தமும்...
என்னோடும்..
என் தனிமையோடும்..!

**

--இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (30-Aug-15, 5:31 pm)
பார்வை : 172

மேலே