பச்சை சட்டை
இந்த முறை என்னை தப்ப விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.நான் சாக வேண்டும்.இரண்டு முறை முயற்ச்சித்தும் நான் சாகாமல் தப்பிக் கொண்டேன்.ஆனால் இந்த முறை கூடவே கூடாது.
இப்போது சரியாக புஷ்பத்தூர் ரயில்வே ஐங்சனுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் தலை வைத்திருக்கிறேன்.ரயில் வர அரைமணி நேரமாகும். என்னைச்சுற்றி யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.நாளை என் பெயர் புகைப்படத்தோடு செய்திகளில் அடிபடும். பத்தோடு ஒன்றாக என்னைப் பற்றிய செய்திகளை என் அப்பா பார்ப்பார்.அம்மாவுக்கு தகவல் தருவார்,தரலாம். இரண்டு பேரும் காரியம் முடித்து தொழிலதிபர்கள் போர்வை போர்த்தி ஓடத் தொடங்கிவிடுவர்.
தூக்க மாத்திரைதான் முதலில் தேர்ந்தெடுத்தேன . நான் சாதாரணமாக எழுதினாலே டாக்டர் கையெழுத்தாகத்தான் இருக்கும்.தெரிந்த கிளினிக்கில் ஒரு மருந்துச்சீட்டு வாங்கி தூக்க மாத்திரைகள் மொத்தமாக எழுதிக்கொண்டேன். அறிமுகமான மருந்துக்கடைக்குச் சென்றேன்.சுகுமார் பில் போட்டுகொண்டுஇருந்தார். நலம் விசாரித்தார். எதற்கு இத்தன மாத்திர என்றார். சந்தேகம் வராதவாறு சிரித்தேன். அதற்குள் மாத்திரை என் கைக்கு வந்திருந்தது. பச்சை சட்டைக்கார்ர் கொடுத்தார். என்னையுமறியாமல் சட்டையை கவனித்தேன்.பச்சை நிறத்தில் சின்ன கோடு போட்டது. ஆயிரம் ரூபாத்தாளை கொடுத்து மாத்திரை கிடைத்த சந்தோசத்தில் சாகும் வேகத்தில் மீதி பெறாமல் கடையிலிருந்து இறங்கி சாலைக்கு வந்தேன். மிகப் பரபரப்பாய் விரைந்த வாகனங்கள் இன்றே என் வாழ்வில் கடைசி.சாலையை கடக்க என் பின்னே யாரோ அழைக்க
திரும்பினேன்.மருந்துக் கடை வேலையாள் . மீதிப் பணத்தோடு என்னைப் பார்த்து வந்தவரை விருட்டென்று ஒரு கார் மோதி தூக்கி எறிந்த்து. ஒரு நொடியில் முடிந்து போனார். எனக்கு நேர்ந்திருக்கக்கூடாதா என்று ஆசைப்பட்டேன். கூட்டம் சேர்ந்த்து. அவருக்கான சடங்குகள் தொடங்கின. கால் பரப்பி கிடந்தவரின் கைகளில் எனக்கான மீதிப்பணம் ஒரு ரூபாய் சாக்லேட்டும் இருந்தது.இறுகப் பிடித்திருந்தார்.
ரயில் இன்னும் வரவில்லை. ரயில் வரும் ஓசை காற்றை விட தண்டவாளத்தில் வேகமாக வந்துவிடும். காதை வைத்தேன். ம்கூம் , சத்தமில்லை. புஷ்பத்தூர் வந்தாலே தயாராக வேண்டும். தலையை வைக்கலாமா அல்லது உடலை கிடத்தலாமா? தண்டவாளத்துக்கு இருபுறமும் தென்னை மரங்கள் இருந்தன. இப்போதைக்கு மனித நடமாட்டமில்லை.
கையில் இறுகப்பிடித்திருந்த பணமும் சாக்லேட்டும் மரணத்தில் என்னைப் பார்த்து நிலை குத்திய பார்வையும் என் சாவை கொஞ்ச நாள் தள்ளிப்போட்டது.பின் சாத்தான் மீண்டும் தூண்ட தூக்குப்போடுவதென முடிவு செய்து கயிறு வாங்கினேன்.எழுபத்தைந்து கிலோவை தாங்க வேண்டும்.நாக்கு வெளிவந்து மூச்சு நின்றபிறகு அறுந்தால் பரவாயில்லை. தேடிப்பிடித்து வாங்கினேன்.வழியில் பேக்கரிக்குள் கால்கள் நுழைந்தன.ஒரு டீ சொல்லிவிட்டு அமர்ந்தேன்.கையில் கயிறு இருந்த பையை மேசையில் வைத்தேன்.டீ கொண்டுவந்த பெரியவர் மேசை கால் இடற என் சட்டையில் கொஞ்சம் கொட்டிவிட்டார்.கல்லா பெட்டி முதலாளி பெரியவரை முறைக்க
சாரி சார் சாரி சார் என்றார் பெரியவர். நிமிர்ந்து பார்த்தேன். ஐம்பதிருக்கும். சின்னக் கட்டம் போட்ட பச்சை சட்டை அணிந்திருந்தார்.பதட்டமாகி இருந்தார். பரவால்ல வேற கொண்டு வாங்க என்றேன். திரும்பி வந்தவர் டீ கப்பை என் பைக்கு அருகே வைத்துக்கொண்டே என் மேல் சரிந்தார். அம்மா என்று ஒரு சின்ன அலறலோடு நெஞ்சைப் பிடித்தார்.எனக்கு நெஞ்சுவலி வந்திருக்கக் கூடாதா? அவருடைய கண்கள் டீ யை பார்த்திருந்ததா
பையை பார்த்திருந்த்தா தெரியவில்லை,அடங்கிப் போனார்.
டீ சிந்தாமல் முழுமையாக இருந்தது.
யாரைப் பார்த்தாலும் பச்சை சட்டையாகத் தெரிந்தார்கள். என் தற்கொலையை பச்சை சட்டை தள்ளிப் போடுகிறது.என் மண்டைக்குள் இரண்டு பேரின் கண்களும் சாக்லேட்டும் டீயும் மாறி மாறி வந்தன.இனியும் எனக்காக ஒரு பச்சைசட்டை சாக்க்கூடாது. ஆள் அரவமற்ற தண்டவாளத்திற்கு வந்துவிட்டேன்.
ரயிலின் ஒலி தண்டவாளத்தில் நெருக்கமாகக் கேட்டது. மிக அழுத்தமாக தண்டவாளத்தில் தலை வைத்தேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் என் தலை நசுங்கும்.இங்கே எந்த பச்சை சட்டையுமில்லை. என்னை யாரும் சாக்லேட் கொடுத்தோ தேனீர் கொடுத்தோ காப்பாற்றப் போவதுமில்லை. ரயிலின் நெருங்கும் ஓசை பேரானந்தமாய் பட்டது.கண்களை மூடினேன். பச்சை சட்டைகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்தது. அந்த கண்கள் பூச்சிகளாகப் பறந்தது. திடுக்கிட்டு விழித்தேன். ரயில் என்னை நெருங்கிய சமயம் மி
யாருப்பா அது என்றவாறு தோளில் இளநீர் குலையோடு ஒருவர் என்னருகில் வந்துவிட்டார். வராதீங்க போங்க , நான் கத்துவதை காதில் வாங்காமல் இளநீர் குலையை வீசிவிட்டு என் காலை இழுக்க முனைந்தவரை உதைத்தபடி பார்த்தேன். சிறு கட்டம் போட்ட பச்சை சட்டை போட்டிருந்தார். ரயில் பத்தடி தூரத்தில் வந்திருந்தது.
_____________________________________________
நன்றி: முகநூல் மூலம் மகுடீசுவரன். மு