திரானா பாப்பாவின் மழழைக் கவி 3

அவளின் சின்னக் காதிலே
இரகசியத்தை போட்டு விட்டு
"பாப்பா இத அப்பாட்ட சொல்லிராத"
என்று நான் கண்ணடித்து
அவளை விடுவித்த மறு நொடி...
நேரே ஓடிச் சென்று
அவள் அப்பாவின் மடியேறியவள்
அவர் காதைக் கடித்து விட்டு
சத்தமாய்க் கத்தினாள்
"அப்பா இத அம்மாட்ட சொல்லிராத"
இடுப்பில் இரு கைகள் வைத்து
இருவரையும் நான் முறைக்க
நட்சத்திரமாய்க் கண்ணடித்தாள்
எங்கள் குட்டி "திரானா பாப்பா"
இரகசியமாய்க் கண்ணடித்தார் என்னவர்..!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்