மறந்துவிட்டாயா _12

12.நிலவைக்காட்டிச் சோறூட்டி
நிதமும் உன்னைச் சீராட்டி
உன் செயலையெல்லாம் பாராட்டி
உந்தன் நினைவால் உயிர்ப்பூட்டி
உலவும் தெய்வத் தாயவளை
மறந்துவிட்டாயா...?
------------------------------------------------------------------
11.புல்லுக்கட்டு நிதம் சுமந்து
மல்லுக்கட்டும் உடலோடு
அல்லும் பகலுமுழைத்து
கல்வி பல நீபயில
வில்லாய் வளைந்த தாயவளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
( ஓவியம் எனது மகள் ஹரிணி கிருத்திகா )
(மறந்துவிட்டாயா 11 முதல் 20 வரை தாயின் நினைவாக மலரும்)

குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (13-Sep-15, 4:56 pm)
பார்வை : 701

மேலே