ஆசை
என் ஆசை முன் ஓட
நான் அதன் பின் ஓடிநின்றேன்!
சிறிதானத் தடையானாலும்
நான் விண் தாண்டி நின்றேன்!
கண் மூடி ஓடாதே என்ற ஊராரை
நிந்தித்து வெறுத்தேன்!
நன்மையா தீமையா-விளைவை
சிந்திக்க மறுத்தேன்!
வெற்றான பாலைக்குள் இறுதியில்
நான் சென்று வீழ்ந்தேன்!
முற்றாகாது என் வாழ்வை
இறைஅன்பு காக்கும்!