நம்பிக்கை வேண்டுதல் வேண்டாமை

"துணை தேடும் ஜீவன்
ஸ்பரிசம் உணரும் நாடி
கடன் கொண்ட உறவு
கழித்துப்பார் நினைவு
பிறவியே ஒரு எச்சம்
வாழ்தலே மிச்சம்"

சேலை பிடித்துறங்கும்
சிறு குழந்தையின்
உறக்கம் கலையாமல்
மாற்று துணி கொடுத்து
மெதுவாய் விடுவித்து
விலகும் தாயைப்போல்

நீ என்னைவிட்டு விலகுதலை
உணராமல்
சேலையின் வாசத்தை
மனசுக்குள் தேக்கியபடியே
நீ அருகிலிருக்கும் நம்பிக்கையுடன் உறங்குகிறேன்...

எழுதியவர் : செல்வமணி (28-Sep-15, 12:27 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

மேலே