மௌனம்
மௌனத்தின் இருப்பு
பேசியதும்
பேசாததும்
மௌனம்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
.......
விரலிடை நீர்போல்
என் காதல்.
நழுவிக்கொண்டே இருந்தது
நான்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
மௌனம்.....
பார்வைகளிடையே பரிமாறிக் கொண்டிருந்தது
பாஷைகளை
மறந்து விட்டு.
மௌனம்......
சுற்றத்தில் தொலைந்து போயிருந்ததுவும்
குற்றத்தை தொலைத்துப்போனதும்
மௌனம்.....
மௌனம் குற்றமா?
மௌனமே குற்றமா?
மௌனமும் குற்றமா?
மௌனம்...
குற்றம்....
குற்றம்......
மௌனம்.