நட்பு

சாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை
சாகும்வரை நாங்கள் ஒரு தாயின் பிள்ளை !

பிரிவுகள் வந்து விலகியதில்லை
பிரியங்களை நாம் இழந்ததுமில்லை !

சரிவுகள் வந்ததால் சாடியதில்லை
சரியற்ற வழிகளில் சென்றதுமில்லை!

எது வந்தபோதும் மறைத்ததுமில்லை
எதைக் கேட்டபோதும் மறுத்ததுமில்லை !

துக்கங்கள் வந்து தவித்திட்ட போதும்
துணையாய்ப் பக்கத்தில் நிற்க மறந்ததுமில்லை !

உறவுகள் சேர்ந்ததால் வந்ததல்லவிச் சொந்தம்
உணர்வுகள் சேர்ந்ததால் வந்ததே இப்பந்தம் !

காலங்கள் வந்து கலைந்தே போனாலும்
காவியமாகி வாழ்ந்தே இருப்போம் !

- பொலிகையூர் ரேகா

எழுதியவர் : - பொலிகையூர் ரேகா (3-Oct-15, 6:47 pm)
Tanglish : natpu
பார்வை : 487

மேலே