திருமண அழைப்பிதழ்

உறவுகள் ஒரு பக்கம்
மணமக்கள் மறுபக்கம்

அழகு ஆடம்பரம் பார்த்து
ஆளுக்கொன்றாய் தேர்வு செய்து

கடவுளின் திருஉருவம் அவரவர் வண்ண புகைப்படம் அச்சிட்டு

தாய்மாமன் பங்காளி பெண்ணுக்குரியோர் பிள்ளைக்குரியோர் தனது பெயர் இல்லை என தகராறு செய்து

ஒரு வழியாய் அச்சிட்டு
கடவுளுக்கு முதல் அழைப்பு - உற்றார்
உறவினர்கெல்லாம் இரண்டாம் அழைப்பு.

இத்தனை ஆர்ப்பாட்டம் முடிந்து அவரவர் கைகளில் உன்னை சேர்த்தோம்.

ஆழகாக திருமணம் முடிந்தது
அலைந்து திரிந்து தேர்ந்தெடுத்த நீயோ மறுநாள் குப்பை தொட்டியில்.!

எழுதியவர் : (6-Oct-15, 8:29 am)
பார்வை : 528

மேலே