கார்குழல்

உலகம் வியக்கும் கருநிற அழகியே!
நூலின் அளவாயினும் உன்னை வேண்டியே பல
நங்கையின் நாட்கள் நகர்கிறதே.......
ஆழியின் அலையில் சிக்கித்தவிப்பதை போல
முகிலின் குறும்பில் உன் அடர்வனம் கலைகிறதே....
தோழியின் கார்குழலில் கனிந்தே என்
நாட்கள் கடக்கின்றனவே.....
ரெட்டைசடை பின்னிய கரங்கள் உன்னை
ஒய்யார கொண்டையில் ஏற்றும் வரை ஓய்வதில்லை...
கரங்கள் பெற்றாலும் கண்கள் மகிழ்ந்தாலும்
மலர்வாசனை ஏனோ உனையே சேர்க்கிறது.......

எழுதியவர் : சத்யாதுரை (8-Oct-15, 8:37 pm)
Tanglish : kaarkuzhal
பார்வை : 917

மேலே