ஏழாவது மனிதன் 9

யாரோ எழுதிய
கவிதைக்குள்
ஓடித் திரிகிறேன்...
யாரோ வரைந்த
ஓவியத்துள்
அமர்ந்து கொள்கிறேன்....
யாரோ ஒருவரின்
நாவலுக்குள் முக்கிய
கதாபாத்திரமாகிறேன்...
யாரோ போடும்
நிலைத் தகவலுக்குள்
இடைசெருகலாகிறேன்...
யாரோ படித்த
பொழுதொன்றை
சுமந்தே கரைகிறேன்...
இவன் ஒரு மாதிரி
என்பதற்கு
இதை விட வேறு என்ன வேண்டும்....!
கவிஜி