இறைவனை நோக்கிய பயணம்
பௌதீக விதி
ஒன்று உள்ளது
அதன் பெயரோ - ஆற்றல்
அழிவின்மை விதியாகும்........
அதன்படி மனிதனால்
ஆற்றலை ஆக்கவும்
அலிக்கவும் இயலாது........
இருப்பினும்
ஒருவகை ஆற்றலை
மற்றொருவகை ஆற்றலாக
மாற்றும் தன்மை
கொண்டவன் மனிதனாவான்.......
விஞ்ஞானம் கொண்டும்
மெய்ஞானம் கொண்டும்
என்னதான் மனிதன்
உலகை வென்றாலும் - அவனையும்
ஆட்டி படைக்கும்
வல்லமை கொண்டது
பஞ்ச பூதமெனும்
இயற்க்கை ஆகும்.........
பஞ்ச பூதங்களே
உலகமென கொண்டாலும்
அவற்றுள் ஒன்று
மற்றொன்றை மீளாதிருக்க
கட்டுப் படுத்தும் - ஓர்
சக்தியும் உண்டு.....
அந்த சக்தி எதுவென்று
எவர் அறிவார்.......
இறைவனை
நோக்கிப் பயணிப்பவன்
அந்த இறைவனை
அறிகிறானோ இல்லையோ
அப்பயணத்தில் நிச்சயம்
தன்னை அறிவான்......
தான் யாரென்றும் - தன்
குணம் யாதென்றும்
அறிய இயலாதவன்
தானே யாதும்
அறிந்தவன் எனும்
தலைக்கனம்
கொண்டவனாயின்
இறுதிவரை......
இறைவனை
நோக்கிய பயணத்தில்
தானும் இறைவனும்
புரியாத புதிரே ஆகும் !?.........
- தஞ்சை குணா