என்ன உலகமடா

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து -தெருவில்
போகிறேன் -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...

ஞானத்தில் பழுத்து
அதிகமாக பேசாமல்
ஊத்தை துணியுடன்
ஞான பார்வையுடன்
என் அருகில் ஒருவர்
நிற்கிறார் -அவர் கேட்காமல்
காசை போடுகிறார்கள்
பிச்சையாக ...

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை
பார்த்து எவ்வளவு
காலம் தான் ஏமாறும்
இந்த உலகம் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Oct-15, 3:34 pm)
பார்வை : 69

மேலே