கண்ட துயர்
அருந் தமிழை வணங்கும் படி
கருந் தமிழன் குணங்கள் நாடி
பெருந் தமிழ்நிலம் இணங்க வேண்டி
திரு உள்ளம் கணங்கும் தானே
கணங்க ளாளும் பெம்மானை தேடி
மணக்கும் மலரெலாம் பாதந்தனில் வாடி
பிணங்கும் மாந்தர் கொண்ட கோடி
கணக்கும் இலவு காத்த கிளியாமே
- சரவணன் சா உ