அடியே

வர்ணிக்க பிறந்தவள்
நீயடி
உன்னை மட்டும்
வர்ணிக்க பிறந்தவன்
நானடி!!!!

உந்தன் ஈர்விழி பார்வைகள்
படுகையிலே
எந்தன் உயிர் உடல் மொத்தமும்
நடுங்குதடி!!

பேசும் பேச்சிலும்
நடக்கும் நடையிலும்
என் மனம் அது
மொத்தமாய்
நொறுங்குதடி!!!

வெட்கி நீயும்
என்னை பார்க்கும்போது
என்
இதயமும் வேகமாய்
துடிக்குதடி!!!

இதுவரை
கண்கள் பேசிய வார்த்தை
அதனை
உதடுகள் சொல்ல
நினைக்குதடி!!!

ஒற்றை வார்த்தை
உதிர்த்திடு அன்பே
உலகை கையில்
சிறை பிடிப்பேன்!!!

பிடித்த உலகின்
செவிகள் தெறிக்க
உனை
என் ராணி என்று உரைப்பேன்!!!

எழுதியவர் : j (15-Oct-15, 3:34 pm)
Tanglish : adiye
பார்வை : 258

மேலே