மறைத்து வைத்திருக்கிறேன்

நீ வானவில்
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?

கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்

நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Oct-15, 4:00 pm)
பார்வை : 102

மேலே