பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது - Universe

முத்துக்களை தூவிவிட்டது போல வானத்தில் தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள் உண்மையில் ஒரு பொய் தோற்றம் தான்.

இந்த பிரபஞ்சத்தில் விண்மீன்கள் திட்டு, திட்டாக குவியலாக உள்ளது
இந்த பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரு வெடிப்பு (big bang theory) மூலம் உருவானது என்கிறது அறிவியல்.

(அதிலும் பெரு வெடிப்பு கொள்கையே தவறு என்று கூறும் அறிவியலார்களும் உண்டு) ஆனால் அந்த பெரு வெடிப்பு கொள்கை நிகழ்வதற்கு ஒரு நொடிக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு ஆன்மீகத்திலோ அல்லது கடவுளிடமோ தான் கேட்க வேண்டும்.

நாலா பக்கமும் புகை மூடம் போல விரிந்த பிரபஞ்சம் நாளாக ஆக திட்டு திட்டாக ஆங்காங்கே புகை மூட்டங்கலாக திரண்டு உடுமண்டலங்கள்(galaxy) உருவாகியது. இந்த உடுமண்டலங்கள் நாளடைவில் நட்சதிரன்களாக பிரிந்து இன்று இருக்கும் நிலையை எட்டி உள்ளது

இனி ஒளி ,ஒலி மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பதை பாப்போம்
ஓலி, ஒளி, பொருள், ஈர்ப்பு விசை எவ்வாறு பிறந்தது ?

ஒளி (light):

மாபெரும் வெடிப்புடன் ஒரு நாள் உதித்தது இந்த பிரபஞ்சம் (14 .3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு )நெருப்புகுலம்புடன் ஒளிரும் ஒரு மாபெரும் கோளமாக அது விரிந்து கொண்டே இருந்தது

அக்கோலதினுள் அணுவின் மூலக்கூறுகளாகிய electron, proton மற்றும் neutron மற்றும் பிற அடிப்படை துகள்கள் யாவும் மிக பிரகாசமான ஒளி வெள்ளத்துடன் நிறைந்து கிடந்தன

பொருளில் அவை ஒன்றாக தெரிந்தாலும் பொருள் என்றும் ஒளி (light) என்றும் வேறுபடுத்த கூடியவையாக அவை இருந்தன பொருள்களுக்குள்ளே சிறை பட்டு கிடந்த ஒளியின் போட்டோன்கள் அணு துகள்களுடன் மோதி எதிரொலித்து உள்ளே சுற்றியபடி கிடந்தன

அது தான் அணைத்துக்குமான மூல பிரபஞ்சம் அல்லது குழந்தை பிரபஞ்சம் ஆகும். இந்நிகழ்வு நடக்க அது 3800 ஆண்டுகள் எடுத்து கொண்டது. பின்பு அது பான் மடங்காக விரிவடைந்ததால் பிரபஞ்சம் குளிர்வடைந்தது electron, proton மற்றும் neutron மற்றும் பிற துகள்கள் ஒன்று கூடி (atom) அணு உருவாகியது
இதனால் வெற்றிடம் மிகுந்தது இதனால் இய்ம்பூதங்களில் ஒன்றான ஆகாயம் உருவாகியது

ஒளி சுதந்திரமாக பரவ ஆரம்பித்தது

ஒரு வழியாக ஒளி வேறு அணு வேராக பிரிந்தது அன்று தோன்றிய ஒளி விரிவடைந்திருக்கும் பிரபஞ்சதினுள் பரவியபடியே இருந்தது இருக்கிறது அதே ஒளி இன்றும் நம்மை நோக்கி வந்த படி உள்ளது

அந்த ஆதி ஒளியை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகும நம்மால் கருவிகள் மூலம் இன்றும் காண முடிகிறது அவ்வொளியை (cosmic micro wave band - cmb) என்று அழைக்கிறார்கள்

டிவி இல் இரண்டு சேனல்களுக்கு இடையே ஏற்படும் இரைச்சலில் 1 சதவீதம் இந்த நுன்னலயாலே ஏற்படுகிறது தொலைநோக்கியின் மூலம் இதை ஆராயும் போது எல்லா திசைகளிலிருந்தும் ஒரே சீராக ஒரே மாதிரியாக பரவி இருப்பது தெரியவருகிறது

1965 லையே ரேடியோ ஆண்டேனக்களில் ஒரு வித இரைச்சலை இவ்வலைகள் ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்

cosmic baground explorer என்டர் விண்கலம் 1990 இல் இந்த ஆரைய்சிக்க்காகவே அனுப்பப்பட்டது எதிர்பார்த்த படி cmb அகிலம் முழுதும் சீராக இருப்பதை நிரூபித்தது

பிரபஞ்சத்திற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் ஆதி பிரபஞ்சதினுள் இருந்து நாதம் (sound) பிறந்தது

அணுவும் ஒளியும் இணைந்து பொருட்கள் உருவாகும் போது ஓலி (sound) உருவானது எப்படி

ஓலி பரவும் போது அடுத்தடுத்து காற்றை நசுக்கியும் தளர்த்தியும் (அலையை உருவாக ) பரவுவதை போல பிளச்மாவும் நசுக்கப்பட்டு தளர்தபட்டும் சலனப்பட்டது நசுங்கிய இடங்களில் பிளாஸ்மா மேலும் சூடடைந்தது
தளர்த்தப்பட்ட இடங்களில் மேலும் குளிர்வடைநதது இதன் காரணமாக தான் ஆரம்ப குழந்தை பிரபஞ்சத்தில் திட்டு திட்டக வெப்ப மாற்றங்கள் ஏற்பட்டன. பிரபஞ்சம் விரிவடைகையில் இதுவும் விரிவடைந்தது

இது இப்படி இருக்க ஆரம்ப பிரபஞ்சத்தில் ஒளியின் தாகுதளிளிருந்து விடுபட்ட அணுக்கள் எங்கெல்லாம் ஒலியால் பெருக்கப்பட்டு அடர்வாகினவோ அங்கெல்லாம் அவை ஒன்று கூடி திரண்டன திரட்சி ஏற்பட்டதால் ஈர்ப்புவிசை ஏற்பட்டது இந்த நிறை ஈர்ப்பு விசையினால் பல பொருட்கள் ஒன்று திரண்டன

அதே போல் ஒலியால் தளர்வு அடைந்த பொருட்கள் ஈர்ப்புதிகமான பொருளை நோக்கி சென்றன இப்படியாகவே உடுமண்டலங்களும் கோள்களும் உருவாகின
நாதம் முதலில் தோன்றியது பின்பு வித்(ந்ட் )துக்கள் தோன்றியது.

எங்கோ கேட்டது போல இருக்கிறதா இதை தான் அருணா கிரி நாதர் நாத விந்துகலாதி நோ நாம என்று பாடியிருக்கிறார்.

நாதத்திலிருந்து விந்து பிறந்ததாக சைவ சித்தாந்தம் கூறுகிறது ஒளியே பிரணவம் என்றும் அதுவே அனைத்திற்கும் மூல காரணம் என்றும் சித்தாந்தம் கூறுகிறது
இது போல அணைத்து சமயங்களிலும் எதோ ஒரு வழியில் இதை சொல்லி இருப்பார்கள்

அனால் இதை ஆதி மனிதர்கள் எவ்வாறு அறிந்தார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது

எந்த கருவியும் இன்றி மெய்யே கருவியாக கொண்டு கண்டுபிடித்திருக்க வேண்டும்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு - அறிவ (23-Oct-15, 11:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 573

சிறந்த கட்டுரைகள்

மேலே