அறிவை ஆயுதங்களாக்கு

அறிவை ஆயுதங்களாக்கு

கரடு முரடாய்
காலை இடறும்
சில கரும் பாறைகள்
அறிவெனும் உளி கொண்டு
அவற்றை செதுக்கு !

காற்றின் திசைக்கேற்ப
கண்டபடி ஆடும்
சில காலிக் குடங்கள்
அறிவெனும் நீர் ஊற்றி
அவற்றை நிரப்பு !

துருப் பிடிக்கவே
இறுகிக் கிடக்கும்
சில இரும்புத் துண்டுகள்
அறிவெனும் தணல் மூட்டி
அவற்றை இளக்கு !

அறியாமை முள்ளால்
கிழிந்து கிடக்கும்
அங்கங்கே சில ஆடைகள்
அறிவெனும் ஊசிநூல் நுழைத்து
தைத்திடுஅவற்றை இணைத்து !

- ருக்மணி

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 10:15 pm)
சேர்த்தது : கவிஞர் ருக்மணி
பார்வை : 681

மேலே