தவிப்பு கவிதை

தவிப்பு…!!
*
அவன் சொன்னதை
அவள் தவறாக நினைத்தாள்
அவள் சொன்னதை
அவன் தவறாக நினைத்தான்.
பதட்டமானப் பேச்சில் நேர்ந்த
புரிதலின்மையில்
இருவரும் பேசிக்கொண்டது
வேறுவேறல்ல.
ஒரே சொல்லாடலால்
இருவருமே தள்ளாடல்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Oct-15, 3:40 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 118

மேலே