உயரும் நம் மதிப்பு

அனல் கக்கும் துன்பங்கள்
அடுக்கடுக்காய் சோதனைகள்
வீட்டில் இல்லை துணிமணிகள்
விளக்குகள் இல்லா குடிசைகள்!

இதுவரை படித்ததோ சோகக்கதை
இன்றும் இது ஒரு தொடர்கதை
இருள் போக்கும் என்ற நம்பிக்கை
இருப்பதால் தொடரும் வாழ்க்கை!

வரும் போதும் எதுவும் கொண்டுவரவில்லை
வாழும் போதும் எனக்கென எதுவுமில்லை
வருத்தப்பட எனக்கு ஒன்றுமில்லை
விரல்கள் இருக்குக்க எனக்கு பயமேயில்லை!

நேற்றைய உலகமும் கிழக்கில் உதித்தது
இன்றய உலகும் அது போல் நிகழும்போது
நாளைய உலகத்தின் கவலை எதுக்கு
நாளும் உழைத்தால் உயரும் நம் மதிப்பு!

எழுதியவர் : தொகுப்பு பாண்டியன் (29-Oct-15, 5:03 pm)
Tanglish : uyurum nam mathippu
பார்வை : 117

மேலே