சந்தோச ஊஞ்சலிலே

சந்தோச ஊஞ்சலிலே
சந்தோச மலரெடுத்தேன்
தாய்மை என்ற பந்தத்திலே
அழகான ஆண் மலரை
என் கண்ணின் மணிபோல
தினம்தினமே காத்துவைச்சேன்
தாய் குருவி பறவை போல
பொத்திவைச்ச பாசமெல்லாம்
மகனிடமே அடகு வைச்சேன்
பாசமென்ற வட்டி எல்லாம் அதிகமாகி
திவாலானேன்
வட்டிக்கு தண்டனையாய்
சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டேன்
முதியோர் இல்ல சிறைதன்னிலே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (30-Oct-15, 12:48 am)
பார்வை : 259

மேலே