செல்வம் சௌம்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வம் சௌம்யா
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Oct-2015
பார்த்தவர்கள்:  860
புள்ளி:  168

என்னைப் பற்றி...

என்னை பற்றி சொல்வதற்க்கு இடமிருக்கு ஆனாலும்.முகமூடிகள் தான் அழகு கவிதையில் முன்னேற்றமடைந்த பிறகு.கிழிந்துவிடும்
ஆனாலும் ஒரு உறுதி இந்த முகமூடி தவறான தடங்களுக்கு அல்ல

என் படைப்புகள்
செல்வம் சௌம்யா செய்திகள்
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 9:16 am

நினைவெல்லாம் மறந்ததடி
காதல் வந்து மோதுகையில்
பித்தமாகி போனதடி நீ நெஞ்சில் வந்து சேருகையில்
என் நெஞ்சினிலே உறங்குகையில் நேசம் வந்து கொஞ்சுதடி
கொஞ்சும் எந்தன் விழிகளிலே
உன் நேசம் என்னில் தஞ்சமடி
தஞ்சம் உன்னில் சேருகையில்
மஞ்சம் ஒன்று வந்திடுமோ
மஞ்சம் வரும் நேரம் தன்னில்
பஞ்சம் வரும் மோகம் தன்னில்

மேலும்

தங்களது ஒரு சில கவிதைகளை படித்தேன் ,அனைத்தும் அருமை ,தாங்கள் தொடர்ந்து இது போன்ற பல கவிதைகளை இயற்றி அதை புத்தகமாக வெளியிட வாழ்த்துகிறேன் 28-Apr-2016 4:14 pm
நல்லாயிருக்கு ஆனால் இன்னும் கொஞ்சம் சுவை கூட்டினால் அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:24 am
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 9:06 am

தாழம்பூ கொண்டைக்காரி
தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டி போகிறேடி
தலையாட்டி போகையில்
கார்கூந்தல் ஆடுதடி
கருநாக பாம்பெனவே
கருநாகம் ஆடுகையில்
என் தேகம் ஆடுதடி
ஆடுகின்ற தேகம் ஒன்று உன் காதலைதான் நாடுதடி
நாடிவரும் காதலிடம்
தயக்கம் வந்து பாடுதடி
ஒருதலை காதலிலே

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:18 am
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 12:52 pm

ஆத்தோரம் குடிசைபோட்டு வாழுகின்ற ஏழை நானே
உழைப்போரம் மனசை போட்டு உழைக்கின்ற வம்சம் தானே
பாடுபட்டு உழைத்திடினும் கால் வயிறு காணலியே
கிழக்கு வெளுக்கும் நேரம்முன்னே
கூவிடுதே கொண்டை சேவல்
கொண்டை சேவல் கூவும்முன்னே
கூவிடுதே பண்ணை ஆட்கள்
அடிமைபட்ட வாழ்வதனில் நொந்துவிட்ட எங்கள் வாழ்வே
நாற்றுநடும் போது மட்டும் உயிரே போகும் இடையதனில்
நிமிர்ந்து நிற்க்கும் நேரமெல்லாம் வந்துவிழும் வசவுமட்டும்
நெல் அறுக்கும் போதுமட்டும் மகிழ்து போகும் மனசுமெல்லாம்
கால் வயிறு கஞ்சிக்கென்றே
நெல்லை கட்டி தலையிலேந்தி
வயலோரம் போகும் மட்டும் உயிரே போகும் மூச்செனவே
மூச்சுவாங்கும் நேரந்தன்னில் தாகம் தீர்க்க வழியே இல்

மேலும்

Leave Reply Here...நன்றி தோழமையே 25-Apr-2016 8:38 am
உண்மைதான்..அடிமைகள் வாழ்க்கை என்பதை மண்ணில் யாரும் வாழ்தல் கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:31 am
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 12:17 pm

என் ஜீவன் பாடுது
உன் விழியோர ஊஞ்சலிலே
உடலில்லா ஜீவன் ஒன்று
உன் நெஞ்சோரம் வந்து நின்று
பாடுது காதல் கேட்டு
உன் மனமில்லா நெஞ்சில்வந்து கதறுதே கண்ணீர்விட்டு
காதலில் தோற்றபின்னும் வானேறி போனபின்னும்
காற்றாகி தானும் வந்து கதறுதே உன் நெஞ்சம் வந்து
தேடாத என் நெஞ்சமெல்லாம்
கூடாத உன் தேகம்தன்னில்
கூடிடவும் துடிக்குதென்னில்
காற்றாகி போனபோதும்
தென்றலாகி தீண்டுகையில்
குளிர் வந்து தாக்குதென்னில்
தேகமின்றி ஆனபோதும்
தென்றலாகி தேடிவந்து
சேர்த்தணைப்பேன்
உன்னை நெஞ்சில்

மேலும்

Leave Reply Here...நேசம்மிக்க நன்றிகளாம் மகிழ்ச்சி தோழமையே 25-Apr-2016 8:35 am
காதலின் தீயில் நெஞ்சம் வெந்து போகிறது.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:23 am
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 1:10 pm

ஆனந்த பூங்காற்று என் இதயத்தின் வாசலிலே தென்றலாகி நுழைந்தடி
துள்ளிவரும் என் நெஞ்சுக்குள்ளே ராகம் பாடி கொஞ்சுகின்றாய்
என் நெஞ்சத்தில் வீசுகின்ற ஆனந்த பூங்காற்று தேனொழுக பாடுதடி
தென்றலாகி தீண்டுதடி
தென்றலாகி தீண்டுகையில்
மேனியெங்கும் பூவாடை வீசுதடி
என் கார்முகில் கூந்தலிலே நீ ஒளியவேண்டுமடா
என் தாவணி குடையினிலே தஞ்சமாக வேண்டுமடா
இமைக்காத என் விழிகள்
நீ வந்தால் இமைக்குமடா
திறக்காத என் இதயம் உனக்காக திறக்குமடா
நான் சிந்தாத வியர்வை எல்லாம்
நீ காதலில் வந்தபின்னே
மேனியெங்கும் பூக்குமடா வியர்வை பூக்கள்

மேலும்

Leave Reply Here...தாங்கள் வருகைக்கு மன மகிழ்ச்சி நேசம்மிக்க நன்றிகளாம் 25-Apr-2016 8:32 am
நினைவின் உணர்வின் மொழிகள் வாசிக்கப்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:26 am
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 8:28 am

காதல் வந்து மோதுகையில்
மாயம் காட்டும் சொப்பனத்தில்
வருவதுவோ காதல்களோ
மாயம் வந்து மோதுகையில்
மயக்கம் வந்து மோதுதடி
மயக்கம் வந்து மோதுகையில்
மாயமெல்லாம் காட்டுதடி
மாயம் வந்து மோதுகையில்
முப்பொழுதும் கற்பனைகள்
கற்பனை மாயத்திலே
காதல் வந்து மோதிடுமோ
கனவில் வரும் காதலிலே
மோகம் வந்து பாடுதடி
மோகம்வந்து பாடுகையில்
மோகினிகள் ஆடுதடி

மேலும்

கனவின் காதல்கள் நேசத்தை ஏங்கி அங்கும் துடித்தால் அந்த காதலில் உண்மையான அன்பு புதைந்திருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:13 am
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 7:57 am

கண்ணும் கண்ணும் கலக்கும் நேரம்
பொங்கும் காதல் மேடையேறும்
நெஞ்சம் இரண்டும் சேரும் நேரம்
பூவிதழ்கள் ராகம் பாடும்
தேகம் மாறி போகும் நேரம்
காதல் தாகம் தானா மாறும்
கண்ணில் மின்னல் அடிக்கும் ஜாலம்
இன்பவனில் போகும் கோலம்
தேகம் மாறி தேடுதடி புது சுகத்தில் பறந்திடவே

மேலும்

இணையும் நேரங்கள் உணர்வின் கவிதைகள் வாசிக்கப்படும் மொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:06 am
செல்வம் சௌம்யா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2016 11:44 pm

நீல வானில் சித்திரை நிலவு சிரித்துக் கொண்டிருந்தது .வெண்ணிலவொளியில் , பாதையோரம் அமர்ந்திருந்த மாயம்மாவைப் பார்த்து விட்டாள் வர்ஷா . வறுமையின் ரேகைகள் முகமெங்கும் பரவியிருந்ததைக் கண்டாள் . ஒரு கணம் அவள் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

ஜீன்ஸ் பேன்ட் , ஷர்ட் , கூலர்ஸ் சகிதம் டூ வீலரில் சென்று கொடிருந்தாள் வர்ஷா .மொபைல் ஒலித்தது . மறுமுனையில் அமுதன் !

" வர்ஷா ! ஈவினிங் உன் தம்பியோடு 'காஃபி டே ' வா , ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "
சொல்லிவிட்டு கட் செய்துவிட்டான் .

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் , லெகிங்ஸ் அணிந்து தம்பி நரேஷுடன் கிளம்பினாள் வர்ஷா . காஃபி குடித்தபடியே அ

மேலும்

என் இனிய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் ! 14-Apr-2016 10:14 pm
அனைவருக்கும் ஆனந்தமாக அமைய அயல்நாட்டில் வாழும் எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ... தமிழ் அன்னை ஆசிகள். நன்றி 13-Apr-2016 9:59 pm
மிகவும் நன்றி ! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! 13-Apr-2016 9:37 pm
சிறந்த படைப்பு: தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் வெற்றி மாலைகள் நன்றி .. . 13-Apr-2016 4:56 pm
செல்வம் சௌம்யா - இரா விவேக்ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2015 3:14 am

" வலி நிறைந்த வாழ்க்கையடீ"

(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------

வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ

மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும்

மேலும்

செல்வம் சௌம்யா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2015 10:08 am

உன்
ஜன்னல் கண்ணசைவில்
நுழைந்தேன்,

உன்
விழிக்கதவு
திறக்க என் மனதில்
உள்ளிருப்பு போராட்டம்

உன்
புன்னகை தேர்தலில்
வென்றபின் வளர்பிறையாய்
நம் காதலின் இனிய பவனி...

உன்
குவளை கண்ணில்
பளபளக்கும் தேன் மலரில்
தீராத ஊற்று.

உன்
குப்பி இதழில்
நிரம்பி வழியும்
எச்சில் மது!

வா,
பாடுவோம் காதல் தேசிய கீதம்,
பருகுவோம் அரிய இனிய அமுதம்....

மேலும்

அருமை 20-Oct-2015 1:26 pm
அடடா ..! அருமை தோழரே தொடருங்கள் 20-Oct-2015 12:54 pm
அருமை 20-Oct-2015 11:09 am
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2015 1:57 pm

மாலை தேடும் மங்கையவள்
மணமாலை தேடுகின்றேன்
மணகோல சந்தையிலே
எங்கெங்கோ தேடுகையில்
எனக்கு கிடைப்பதோ அவமானங்கள்
என் கண்ணீரோ நிரந்தரமாய்
என் வாழ்க்கையோ வெறும் கனவாய்
காரணம் பேசமுடியா ஊமைதானே

மேலும்

கோபம் வேண்டாம் தோழரே.. ஆரம்பத்தில் தவறு வருவது சகஜம் தான்... எல்லோருக்கும்... எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல... பொறுமையாக புரியும்படி எடுத்துச்சொல்லுங்கள்... புரிந்து கொள்வார்கள்... 06-Nov-2015 8:29 am
மாலை தேடும் மங்கையவள் மணமாலை தேடுகிறாள் மணகோல சந்தையிலே எங்கெங்கோ தேடுகையில் அவளுக்கு கிடைப்பதோ அவமானங்கள் அவள் கண்ணீரோ நிரந்தரமாய் அவள் வாழ்க்கையோ வெறும் கனவாய் காரணம் பேசமுடியா ஊமைதானே... மன்னிக்கவும் திருத்தியதற்கு.... மங்கையவள் என்று வரும் பொழுது... என் என்று எழுதுவது... தன்னுடைய புலம்பலை குறிக்குன்... அதில் அவள் என்ற வார்த்தை இருந்தால் நன்று... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுது... நான் எழுதும் போது... இதை விட அதிக பிழையுடன் எழுதுவேன்... பெரியவர்களின் ஆலோசனையால் என்னை சரிசெய்து வருகிறேன்... தவறாக எதாவது எழுதியிருந்தால் மன்னிகவுன் தோழமையே... நன்றி... 06-Nov-2015 8:19 am
கவியில் முரண் உள்ளது நான் சொன்னது விளங்க வில்லையா உங்களுக்கு மாலை தேடும் மங்கையவள் மணமாலை தேடுகின்றேன் என்பது மாலை தேடும் மங்கை நான் மணமாலை தேடுகின்றேன் என இருக்க வேண்டும் அல்லது வேறுவிதமாக கூட இருந்து இருக்கலாம் முதலில் நான் சொல்லியதை கவனிக்கவும் .. பெண்ணினை குறிக்கும் பெயர்கள் எனக்கு தெரியும் தாங்கள் விளக்க வேண்டாம் 19-Oct-2015 3:38 pm
அப்படி இல்லை தோழமையே மணமாலை தேடுவது பெண்ணைதானே குறிக்கும் வேறு கன்னியவள் பேதையவள் போன்றவை போட்டா ஊனமான பெண்ணை அவமானபடுத்துவதா இருக்கும் அதான் வேறு படுத்தி காட்ட.தமிழ் பெண்ணான மங்கை பெயரை பயன்படுத்தறேன் 19-Oct-2015 3:14 pm
கார்த்தி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Aug-2015 1:25 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 2

மேலும்

தங்கள் ஆதரவுக்கு நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
மிக்க நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
நன்றி மேடம் ! 26-Aug-2015 4:00 pm
அருமை... வாழ்த்துக்கள்..!! 24-Aug-2015 9:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

கவிஜி

கவிஜி

COIMBATORE
க முரளி

க முரளி

கோவில்பட்டி
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (24)

மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
thiru

thiru

paramakudi
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (24)

user photo

மதன்ராஜ்

மதன்ராஜ்

சேலம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே