காதலின் பொன் வீதியில்

உன்
ஜன்னல் கண்ணசைவில்
நுழைந்தேன்,

உன்
விழிக்கதவு
திறக்க என் மனதில்
உள்ளிருப்பு போராட்டம்

உன்
புன்னகை தேர்தலில்
வென்றபின் வளர்பிறையாய்
நம் காதலின் இனிய பவனி...

உன்
குவளை கண்ணில்
பளபளக்கும் தேன் மலரில்
தீராத ஊற்று.

உன்
குப்பி இதழில்
நிரம்பி வழியும்
எச்சில் மது!

வா,
பாடுவோம் காதல் தேசிய கீதம்,
பருகுவோம் அரிய இனிய அமுதம்....

எழுதியவர் : செல்வமணி (20-Oct-15, 10:08 am)
பார்வை : 101

மேலே