வலி நிறைந்த வாழ்க்கையடீ

" வலி நிறைந்த வாழ்க்கையடீ"

(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------

வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ

மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும் ஏற்றம்பெற
எண்ணெழுத்தை நீ கொடடீ
கல்வியினை போதிக்கும்
கடவுளாக மாறிடடீ
(வலிநிறைந்த.....
வெற்றிபெற உழைத்திடடீ
வித்தைகளைச் செய்திடடீ
சோம்பலை நீ விட்டொழிடீ - சுவர்
கடிபோல் (கடிகாரம்) ஓடிடடீ
கடமையை மறுதலித்து
கடவுளை நீ நம்பாதேடீ
கடமையயே கடவுளென
நம்பி உழைத்திடடீ - உன்
நாணையத்தைப் பெருக்கிடடீ
உயர்வினை அடைவாயடீ
உத்தமியாய் வாழ்வாயடீ

வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
-இராவி
----------------------------------------

எழுதியவர் : இராவி (24-Oct-15, 3:14 am)
சேர்த்தது : இரா விவேக்ராஜா
பார்வை : 209

மேலே