கடையேழு வள்ளல்களின் வாரிசு அவள்

பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தானாம்
பாரி முல்லைக்குத் தேர் தந்தானாம்
அதிகன் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தானாம்
அடிப்போடி
அப்படியொன்றும் பெரிய வள்ளல்களில்லை அவர்கள்
ஆமாம்
உன்னை விடவா உலகில்
உயரந்த வள்ளல்கள் இருக்கப் போகிறார்கள்?
ஆயுளுக்கும் அழுவதற்கு தந்துள்ளாயே
தானமாக உன் நினைவுகளை...

எழுதியவர் : மணி அமரன் (4-Nov-15, 4:37 pm)
பார்வை : 137

மேலே