எதிரிகள் ஜாக்கிரதை

கச்சிதமாய் ஒட்டப்பட்ட
புன்னைகை துண்டுகள்...!
தேன் தடவிய
வார்த்தை நஞ்சுகள்...!!

பொய்களையும் உண்மைகளாக்கும்
ஏமாற்றுவேலை..!
வேஷம் போட்டு மோசம் செய்யும்
வாழ்க்கை நாடகங்கள்...!!

தூக்கிவிடுவதாய் சொல்லி
தூரத்திலிருந்து கைநீட்டி,
தூக்கிலிட்டு கொல்லும்
நம்பிக்கை துரோகங்கள்...!

உதவி செய்வதாய்
உத்திரவாதம் தந்துவிட்டு,
உபத்திரவம் செய்யும்
உபயோகமில்லாத சத்தியங்கள்...!

நம்பச்சொல்லி
நச்சரித்துக்கொண்டே,
வள்ளல்களாக வாரிவழங்கும்
வாக்குறுதிகள்...!

உண்மை அன்பென
உரக்க கத்திவிட்டு,
மறைமுகமாய்
மனதை உடைக்கும் போலிகள்...!

விழியின் கண்ணீர் துடைப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு - நமது
விழியருகே வரும்
விஷம் தடவிய விரல்கள்...!

மனித முகமூடிகளை
கிழித்தெறிந்துவிட்டு பார்த்தால்,
நல்லவன் என்று
நாம் நினைக்கும்
பூமி மனிதர்களில்
பாதி மனிதர்கள்
பயங்கரமானவர்களாகவே...!

நம்பிக்கைகுரியவராய் மாறி,
நமக்கே தெரியாமல் - இன்றும்
நம்மை ஏமாற்றிக்கொண்டு,
சிரித்துக்கொண்டிருக்கலாம்
சில முகங்கள்...!
முகமூடிக்கு பின்னால்....

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (8-Nov-15, 7:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 162

மேலே