நீந்திப் பழகு
![](https://eluthu.com/images/loading.gif)
நீந்திப் பழகு..!
தாளாத -
மோகத் தீ
தாகத்தை...
முத்தத்தேன்
தீர்த்தத்தில்...
தேகத்தை
முக்கியெடுக்கின்ற
போகத்தை...
'தெய்வம் என்றுணர்'.
'நான்'யென்ற
காரிருளின்
கைப்பாவையாகி...
அரக்க மனம்
உரக்கப் பேசும்
சினத்தின் தீயே...
'அச்சம் தவிர்'.
உயிர் -
உண்ணவாழும்
உயிர்க்குதவ...
உன்னைத் தரும்
உயர் ஞானம் பெற...
எவ்விடர்வரினும்
'தவத்தினை நிதம் புரி'.