மல்லிகை மொட்டு மனசை மெல்லத் தொட்டு
மல்லிகை மொட்டு மனசைமெல் லத்தொட்டு
சில்லென்று பூத்துச் சிலிர்த்து சிரிக்குது
தென்றலில் ஆடியே தேனினைச் சிந்துது
மின்னல் விழியை வரவேற் குதுமகிழ்ந்து
புன்னகையால் மௌனத்தில் பூபாளம் பாடுது
பின்னலில் பூவைநீ சூடு
----இரு விகற்ப பஃறொடை வெண்பா