-இப்படிக்கு, ஓர் அகதி

நீளும் நினைவாய் ..
தாய்நாடு ..நிலவுப்
பொழுதின் நிழல்களாய்
ஏக்கம்.....யாருக்கும்
தெரிவதில்லை....!!

பாலுக்காக குழந்தையோடு
தாயும் அழுகிறாள்..

கரையேறிய பிணங்களாய்
மானம் மறந்து ,
மீசை மடங்கிப் போன
வாழ்க்கை ....

பசி வரும்போது
உரிமை மயங்கும்
ஏக்கம் ஓங்கும்
ஊக்கம் தொலையும்...
இருந்தும்,

இடுகாட்டில் பூத்த
பூச்செடி யென..

நீளும் நினைவுகளாய்
என் தாய்நாடு ............

- இப்படிக்கு,..
ஓர் அகதி

எழுதியவர் : (8-Nov-15, 10:49 pm)
சேர்த்தது : விஷ்ணு பிரதீப்
பார்வை : 100

மேலே