அன்று உனக்குப் புரியும்

அன்று உனக்குப் புரியும்!

ஒரு நாள்
இந்த உலகை விட்டுப் போய்விடுவேன்
மீண்டும் வரப்போவதில்லை
சிலவேளை என்
தொலைபேசி இலக்கத்தைக் கண்டால்
நீ அழுவாய்
தனிமையில் நீ இருக்கும் வேளைகளில்
நான் இல்லாத தனிமையை
நீ புரிவாய்
என் குரலின் சத்தமோ
என் சிரிப்பின் சத்தமோ
உன் காதுகளுக்குக் கேட்காது
உனக்குத் தொல்லை தர
இனி யாருமில்லை
சிரிப்பூட்டுபவன் கோபமூட்டுபவன்
பகிடிவிடுபவன் பின்
மன்னிப்புக் கேட்பவன்
இனி இல்லாமல் போய்விடுவான்
ஆனாலும் உன் கண்களிலிருந்து
கண்ணீர் பொழியும்
ஆனாலும் நான்
எப்பவோ போயிருப்பேன்
திரும்ப வராதா பயணத்திற்கு
ஆகையால் என் அன்பை
ஏற்று அனுபவி
அதில் இன்பம் காண்
நான் விடும் பகிடிகளுக்கு
வாய் திறந்து சிரி
என் இதயத்தில் சுவாசம்
இருக்கும் வரை
என் கூட இரு
இனியும் நீ இப்படியே இருந்தால்
அந்த ஒரு நாள் வரும்
அன்று உனக்குப் புரியும்!
பொன் அருள் – 11-11-2015.

எழுதியவர் : பொன் அருள் (11-Nov-15, 11:19 pm)
பார்வை : 1029

மேலே