காதல் கொண்டேன்

தன்னிலை மறந்த ஓர் நிலை
தந்தாய் என் தலைவா!!!
தாயும், தந்தையும், குருவும், இறையும்
நீ எனக்கானாய் என் தலைவா!!!
என் பித்தம் தெளிவாக்கிய,
சித்தனே என் தலைவா!!!
வேனலில் கானல் வரும்!
கானலில் நீரும் வருமோ???
கானலும், மெய்நீரான அதிசயத்தை
எனக்கருளினாயே என் தலைவா!!!
தேவையில்லா புலம்பல்களில் கட்டுண்ட என் மனத்தை,
மீட்டுத்தந்தது உன் நாமமே என் தலைவா!!!
ஒரு தலையோ ! இருதலையோ!!
காதல் வந்துவிட்டால், ஊனும் இல்லை,
உறக்கமும் இல்லை,
இவையனைத்தும் எனக்கும் பொருட்டில்லை,
உன்மீது நான் கொண்ட காதலால் என் தலைவா!!!
பிரணவத்துடன் உன் நாமம்,
ஐந்தெழுத்து திரு நாமம் உச்சரிக்க - நீயாய் நானானேன்!!!
உன் மீது நான் கொண்ட காதலால்!!!

!!! சர்வம் சிவமயம் !!!

எழுதியவர் : ராஜேஷ் M நாயர் (12-Nov-15, 12:55 am)
சேர்த்தது : Rajesh M Nair
பார்வை : 176

மேலே