இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சாபம்

ஓலைப்பெட்டியைத் தூக்கிட்டு
வேப்பமுத்துப் பொறுக்கப் போன
மகள் வெரசா வீடு திரும்பலன்னா ,

கம்மாய்ல புள்ளக்குட்டிகளோட
சேர்ந்து ஆட்டம் போட்டுட்டுருக்காளோ
தட்டான்/பாப்பாத்தி புடிச்சுக்கிட்டுத் திரியிறாளோ

பனங்காய் பொறுக்கப் போயிட்டாளோ
முள்ளு,கிள்ளு குத்தி நடக்கமுடியாம
எச்சியைத் தடவிட்டுத் திரியிறாளோ

மீன் புடிக்கிறதை வேடிக்கை பாத்துட்டு
இருக்காளோ இல்லை,
மேச்சலுக்கு ஆடு ஒட்டிட்டுப் போன

அத்தாச்சி கூட வரலாம்ன்னு வரப்புல
உக்காந்துட்டு இருக்காளோன்னு
யோசிச்ச தாய், தகப்பனை

எவனாவது காவாளிப்பய கண்ணுல
சிக்கிருப்பாளோன்னு யோசிக்கவச்சதே

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சாபம்..

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (15-Nov-15, 6:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 183

மேலே