மேகம் முகம் பார்த்த சாலை

மேகம் முகம் பார்த்துக் கொண்டிருந்த சாலையில்
வெள்ளாடை அணிந்து
மேடுபள்ளமேறி
இடவலம் லாவகமாய் திரும்பி
எவருக்கும் பாதிப்பில்லா வகையில்
என் வாகனத்தை எடுத்துச் சென்ற வேளை..
சாலையில் கிடந்த தண்ணீர் கூட‌
என்னிடம் கோவித்துக் கொண்டது
அதனைத் தொடாமல் விலகிப்போனதால்...

எங்கிருந்தோ வந்த‌
தண்ணீரின் தோழனான ஒரு பெரிய வாகனம்..
அங்கிருந்த பள்ளத்தில் குதித்து விளையாட‌
இதுவரை காப்பாற்றி வந்த வெள்ளாடை
கறையாகிப் போனது சேறுபட்டு

இப்போது சாலையில் அழுக்காகிக் கிடந்த மேகமும்
என்னைக் கூட்டணி சேர்த்துக் கொண்டது
அதனது கட்சியில்....!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Nov-15, 8:11 pm)
பார்வை : 4427

மேலே