ஹைகூக்கள்

அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ் ?
---- சுகமானசுமை


கச்சேரி முடிந்ததும்
தாமதமாய் வீடு வந்தேன் ;
---- ஆரம்பம் வழக்காடு மன்றம் .


வீட்டில் சண்டை .
மயான அமைதி ; பேசின
---- பாத்திரங்கள் .


வீதியில் போராட்டம்
வரிசையில் குடங்கள்
----- தண்ணீர் லாரி .


தாலாட்டும் சொசுக்கள்
உறங்கும் மனிதர்கள்
----- சேரிகள் .


இரத்தப் பரிசோதனை
மனிதர்களுக்கு ; முகங்காட்டும்
----- கொசுக்கள் .


கூட்டமாய்ப் பறக்கும் பறவைகள்
ஓட்டமாய் தனித்து ஓடுகின்றனர்
----- மனிதர்கள் .


இல்லாதவன் கைஏந்துகின்றான்
காசுதர மறுக்கும்
----- குருடர்கள் .


மறக்க நினைக்கிறேன்
ஒட்டிக் கொள்கின்றன ; வைரஸாய்
----- காதல்


கன்னத்தில் குழி விழிகிறது
கண்ணீரில் நாங்கள்
---- ஊரின் சாலைகள் .


ஐந்து வருட ஆட்டம்
நான்கு கால் நாற்காலி .
---- ஆட்சி .


மழை நின்றுவிட்டது
மரத்தின் அடியில் குடைகள்
------- காளான்கள்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Nov-15, 2:50 pm)
பார்வை : 78

மேலே