கடல் -- புதுக்கவிதை

கடல்
கரை தெரியாக் கவிதை.
மீனவர்களின் இருப்பிடம் .
மீன்களின் சொர்க்கம் .
மெல்ல மெல்ல காலை வருடும்
அன்பின் உள்ளம் .



அலைக்குள் சிக்குண்டு அலைபாயும்
நெஞ்சத்தை அடுத்த அலை
வந்து கலைத்து விட்டுப் போகும்
கனவு சாம்ரா ஜியம் .


மோதியும் மோதாமலும்
சின்னதாய் ஊடல் செய்யும்
காதலர்களின் களஞ்சியம் .


இரவுபகல் பிரித்தறியாது ஓய்வின்றி
ஆர்பரிக்கும் அற்புதம்.
சின்ன சின்ன மணல் வீடு கட்டி
சிங்காரமாய் சிறார்கள்
விளையாடும் மைதானம்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Nov-15, 6:47 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 474

மேலே