சென்னை மழை பற்றி கற்பனை குறள் - சிரிக்க மட்டும்

வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை.

வெள்ளத்துப்பால்
-------------------------------

மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் 'போட்'டினில் பின் செல்பவர்
----------
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
---------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்... இளைத்தார் கீழ்போர்ஷனில் குடி இருப்பவர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-----------------------------
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல் மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
-------------------------
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல உள்ளத்தோர் உதவா விடின்
----------------------------
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
---------------------------------
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால் நாறிடும் பிழைப்பு என்றறி.
----------------------------------------------
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
----------------------------------------------
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
------------------------------------------------------------
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை.


_______________________________________________________
- நன்றி: முகநூலில்: வண்ணங்களின் அரசன்‎ - சிரிப்பரங்கம்!

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (13-Dec-15, 10:05 pm)
பார்வை : 90

மேலே