உயிர்களிடத்து அன்பு வேண்டும்
உயிர்களிடத்து அன்பு வேண்டும் -- நல்ல
---- உணர்விது செழித்திடல் வேண்டும் .
பயிர்களிடத்துப் பாசம் வேண்டும் -- என்றும்
----- பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் .
மனிதநேயம் மலர்ந்திடல் வேண்டும் --- நாளும்
----- மங்காத வளங்கள் வேண்டும் .
பறவைகளிடத்து நேசம் வேண்டும் --- எந்நாளும்
----- பண்புடையவராய் வாழ்தல் வேண்டும் .
காக்கை , குருவி எங்கள் சாதி --- என்றான்
---- அன்றே நம் முண்டாசுக் கவிஞன் .
கணப் பொழுதில் அதனை அழிக்கின்றோம்-- இது
----- கண்களில் நீரினைப் பெருக்குதன்றோ ?
உலகினில் மாற்றங்கள் வேண்டும் -- என்றும்
----- உள்ளன்பு மிகுந்திடல் வேண்டும் .
விலங்குகளையும் நேசத்தல் வேண்டும் --- மாறாத
------ விருப்போடு நேசம் வேண்டும் .