சுற்றுசுழல் மாசுபாடு கவிதை

சூழலை மாசுபடுதுவோம் ....
புதிய புதிய நோய்களை ....
பெற்றிடுவோம் .....
வேறென்ன சொல்ல கவிதையில் ....
குழந்தைக்கும் புரிந்திடும் ....
சூழலை பாதுகாக்கணும் ....
சமுதாயமே உனக்கேன் ....
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...?

மரத்தை .....
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!!
குளத்தை ....
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!!
பொலித்தீனை ....
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!!
காறி துப்புகிறோம் ....
பழக்கவழக்கம் இல்லாமல் ....!!
குப்பையை ....
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!!

வீடுக்கொரு மரம் நடுவோம் ....
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் ....
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் ....
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் ....
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ...
வாழ்வோம் .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Dec-15, 8:36 pm)
பார்வை : 604

மேலே