வருத்தம்தான்

21-12-15
வருத்தம்தான்..

மறுதலித்தேன்
மரணத்தைத் தழுவினர்
பொறுத்திலேன் பொங்கினேன்
பொழிந்திட்டேன்!
வருத்தம்தான்..
அள்ளி எடுத்தகை
அதனையும் அழிவென்பார்!
==== ====
கட்சிக் கொடியூன்றிக்
கால்வாயில் வீடுகட்டிப்
பட்சிகளுக் கான
பழமரங்கள் - வெட்டித்
தனக்கே,இப் பூமியெனத்
தம்பட்டம் போட்டேன்!
எனக்கொன்றும் இல்லையே இன்று!!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (21-Dec-15, 11:46 am)
பார்வை : 428

மேலே