காதலின் மகோன்னதம்

* நான்
நேசிக்கிறவள் ;

புன்னகைத்து
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
செல்பேசியில்

பொழுதெல்லாம்
தான் நேசிக்கிறவருடன் ...!

* காணும் - என்
விழிகள்
தொடர் கனமழை
பொழிந்தாலும்...

ஏனோ

பூரித்து
சந்தோஷிக்கிறது
மனம் ;

அறிவிக்கிறது
உதடு
முணுமுணுத்து ...

" காதல் வாழ்க..! "

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (21-Dec-15, 5:02 pm)
பார்வை : 70

மேலே