உனக்காக ஓர் ஆனந்த ராகம்
* பால்கனி வந்த
பால்கனி நீ...
கணினி யுகத்தில்
ஸரி கம பத நீ...!
* ஒரு பார்வை
நீ பார்த்தால்
கிணற்றுத்தவளையும்
கடலில் குதிக்கும்...
ஒரு வார்த்தை
நீ சொன்னால்
கூண்டுக்கிளியும்
அரிமா பிடிக்கும் ...!
* நீ பூச்சூடி
நான் பார்த்ததில்லை
நீயே பூ ஆனதால்...
உன் கொலுசொலி
நான் கேட்டதில்லை - பூஞ்
சிரிப்பே இசை ஆனதால் ...!
* திரும்பிப் பார்க்கிறது
சூரிய காந்தியும் ;
நீ அணியும்
மஞ்சள் சுடியை...
விரும்பிக் கேட்கிறது
வானவில்லும்
உன் கூந்தல்
ஜடைமாட்டியை...!
* உன்
காது மடல் தழுவும்
பிளாஸ்டிக் கம்மலாய்
பிறவியெடுக்க ;
கண்ணடிக்கின்றன
நட்சத்திரங்கள்...
உன்
செவ்வாய் பருகும்
சிறு கேன் வாட்டராய்
உன்னுள் வழிய ;
மோதுகின்றன
கார்மேகங்கள் ...!
* அது
கருநிற
கேர்பின்கள் அல்ல ;
மழை மேகங்களை
பூட்டி வைத்த சாவிகள்...
இது
வலத்தோளில்
உலவிடக் கண்டால் ;
உளம் கலைந்தே
யாசிக்கும் சில காவிகள்...!
* நீ
நெற்றியில் வைக்கும்
புள்ளி போட்டுக்காக ;
தன்னைத் தேய்க்கிறது
பெளர்ணமி...
நீ பார்த்தும் பாராது
போகும்போதெல்லாம் ;
தணலாய்க் காய்க்கிறது
தாமரை...!
* வெண்ணிலவை
கொள்ளி வைத்து
கிள்ளிச் செய்த மோதிரம்
உன் விரலில்...
மின்னலிலே
நூல் எடுத்து
வெள்ளி சேர்ந்த சங்கிலி
உன் மார்பில் ...!
* " நானே தங்கம்தான் "
சொல்லாமல் சொல்லி
வெள்ளியை அணிகிறாயோ...
விளையாட்டுப் பிள்ளையாய் - என்னை
கொல்லாமல் கொன்று
வெட்கத்தைப் பொழிகிறாயோ...!
* மூச்சுக்காற்றை மட்டும்
வாய் வழியே விட்டு ;
வெடுக்கென நீ
நகைக்கும்
நிசப்தமொழிச்சுவை
மூன்றாம் பாலிலும் இல்லை ...
தமனிய மேனியே உன்னை
தயங்கியே நான் நெருங்க ;
பொசுக்கென நீ
மறைய
எரியும் மௌனம்
மயானக்கரையின் பிள்ளை...!
* இடக்கை மணிக்கட்டில்
மங்கலக்கயிறு - வாழ்வுதான் ;
பூமியில்
புண்ணிய ஜீவன்...
வலக்கை மணிக்கட்டில்
செல்லற்ற கடிகாரம் ? - மின்னணு
நாடியில்
நேரம் காட்டும் ...!
* கனமழையிலும்
வருகிறாய் வெயிலாய் ...
தார்ச்சாலையிலே
தெரிகிறாய் மயிலாய் ...!
* முகத்திரை போடுகிறாய்
அகச்சிறை ஆகாமல் ...
அகச்சிறை ஆனதனால்
முகத்திரை போடுகிறாய்...?
* நீ போகும்பேருந்தில்
கேட்கிறேன் நீலாம்பரி ...
நீ இல்லா பேருந்தில் - இருந்தும்
நானில்லை முகாரி ...!
* நீர் வேண்டும் நிலமாய்
நீ வேண்டும் வேராகிறேன் ;
நீ தீண்டிப் போகாமல்
தீ தீண்டும் சருகாகிறேன் ...!
* நீ தொட்டுத் தழுவ
மௌசுக்கும் மூச்சே இல்லை ;
நீ நெருங்கி விலக
யாரோடும் பேச்சே இல்லை...!
* என்
கீ போர்டிலும் பட்டன் இல்லை
உன் பேர் தவிர ;
நீ நீங்கினால் பட்டம் இல்லை
என் வான் உதிர...!.....
* உன்னைக் காதலிப்பவர்
ஆயிரம் பேர் உண்டு ;
உன்னால் காதலானவன்
நானொருவன் மண்டு...?
* வானவில்லும் வணங்கும்
வண்ணங்களில் வாழ்கிறாய் ;
வாழாமல் வாழ்ந்து - உன்
எண்ணங்களில் வீழ்கிறேன் ...!
* லட்சம் பதிப்பு
உன் விழி ;
அறிவாயோ
என் வ(லி) ழி...!
* நீ சிரித்தால்
தலைப்புச்செய்தி ;
நீ முறைத்தால் - மலரும்
இரங்கற்பா ...!
* " என் காதல்
நான் சொல்ல
நழுவுகின்ற பெண்ணோ ;
அழுகின்ற
என் ஆண்மை
காவியமோ மனமே...! "
* இப்போதெல்லாம்
சுவாசம் குறைந்து
வருத்துகிறேன் யாக்கை ;
ஏனோ ?
நிமிடத்திற்கு
இருபது முறை
உறிஞ்சுகிறாய் மூக்கை...!
* சொல் ...
இமைகளால்
இமயத்தை அறுக்கிறேன் - உன்
இமைகளால்
இதயத்தை இழக்கிறேன்...!
இயந்திர நரகம்
இனிது - இதில்
இதயமில்லா பயணம்
கொடிது...!
* எதார்த்தம் மீறிய
பிதற்றல் பேர்வழியாய் நான் ;
எல்லை மீறிய
அதிகப்பிரசங்கியாய் நீ...
பொருத்தம்தான் ....!!!
* " மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் "- ஆம்
மாற்றமில்லை;
" என்னில் நீ பாதி
உன்னில் நான் பாதி" - வேறு
ஆற்றலில்லை...!
* எட்டாம் ஸ்வரம்தான்
நீ போடும் சொடுக்கு ;
எட்டுமோ வரம்தான்
மணமாலை எனக்கு ...!
* கண்றாவி நிகழ்வுதான்
இருக்கட்டும் ;
பார்க்கிறேன்
காதலை கடவுளாய் ...
கல்லறை சென்றும்
மறுஜென்மம் ;
எடுக்கிறேன்
கண்ணே சேராயோ...! ?
* என் காதல்
நீ மறுத்தால்
நடமாடும் பிணமாவேன் - அன்றேனும்
என் காதல்
நீ புரிந்தால்
உலகாளும் மனதாவேன்...!
* என் அன்பைச் சொல்ல
தாயில்லை உலகில் ;
தமிழன்னை சொல்வாள் -ஓர்நாள்
வழிமறித்து உன்னில் ...!
* உயிரே...!
ஒருவேளை ;
நீயும்
என்போல்......! ?