துயிலெழு தம்பி

தூங்கிக்கிடக்காதே சின்னத் தம்பி
சேவல் கூவிற்றே தங்கக்கம்பி
நாளைய உலகம் உன்னைநம்பி
நீ எழுந்துகொள்வாய் செல்லத் தம்பி!

மாமரத்துக் குயில் கூவுதே
வானத்தில் காகம் கரையுதே
பால்வேண்டிக் கன்று கதறுதே
நீ எழுந்துகொள்வாய் செல்லத் தம்பி!

மாமா ஏர் ஓட்டுகிறார்
அண்ணன் பால் கறக்கிறான்
அக்காள் பாடம் படிக்கிறாள்
நீ எழுந்துகொள்வாய் செல்லத் தம்பி!

காலைக்கடன்களை முடித்திட வேண்டும்
சிலபாடங்களையும் படித்திட வேண்டும்
சத்துணவுகளையும் சாப்பிட வேண்டும்
நீ எழுந்துகொள்வாய் செல்லத் தம்பி!

பலவெற்றிகளைநீ உலகில் அள்ள
அதன்கனிகளைநீ தினமும் விள்ள
இவைசெய்திட நீயும் பள்ளிக்குச் செல்ல
நேரமாச்சு சின்னத்தம்பி
நீ எழுந்துகொள்வாய் செல்லத் தம்பி!

எழுதியவர் : சுரேஷ்குமார் (27-Dec-15, 10:31 pm)
பார்வை : 193

மேலே