வெற்றியை நம் வசமாக்கலாம்
வாழ்க்கை
முட்களாலும் மலர்களாலுமே ஆனது!
ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை!
விழுவதும் எழுவதும்
சாதாரணம் தான்,
விழுந்தாலே வலி
அது சாதா ரணம் தான்,
மற்றவர்களுக்கு.
வலிப்பவர்களுக்கு
எப்படியிருந்தாலும்
பார்ப்பவர்களுக்கு
மகிழ்ச்சி தான்,
வெளிப்படையாய் அல்லது
ரகசியமாய் மனதுக்குள்.
அந்த மகிழ்ச்சியை முறியடிப்பது
நம் குறிக்கோளாக இருந்தால்
வெற்றியை நாம் வசமாக்கலாம்..
விழும் பொழுது
சிரித்துக்கொண்டு, எழுங்கள்,
யார் சிரித்தாலும்
அதன்பின் வலிக்காது!
இந்த வாழ்வின் விசித்திரமே
நம்மை சுற்றிலும்
பின்னப்பட்ட வேலியும்
நம்மை சிக்க வைக்கும்
சூழலும் தான்..
அதை உணர்வதில்
இருக்க வேண்டிய முயற்சியில்
முதிர்ச்சி இல்லாது
அப்பாவிகளாய்
அலைகிறோம்;
அலைக்கழிக்கப்படுகிறோம்;
அனுபவம் அடைந்ததும்
அதை உணர்கிறோம்;
வருந்தியே
தவிக்கிறோம்.
வாழ்க்கையின் வாடிக்கை, இது தான்...
தெரியாத உணர்வுகளால்
தொலைந்து போகும்
மனிதர்களுக்கு
இதையெல்லாம்
சொன்னாலும் புரியாது!
பட்டு தெளிவது ஞானம்,
படாமல் தெளிவது யோகம்!