யாவும் யாவர்க்கும் சமம்
இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!
தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!
கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!
இயங்க முடியா கைகளுக்கு
இயங்கிட கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...!
உரைகள் பலவென கற்றுத் தேர்ந்திடுவாய்,
ஊருக்கு உண்மைகள் கூறிடுவாய்,
இவை யாவும் சொன்னது நீயாகும்,
ஆக நீயும் நல்வழி நடந்திடுவாய்.
நாளை என்ற நிலை வேண்டாம்
நீ இயங்கும் நாளே புத்தாண்டு
எனவே
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இங்கணம்
செல்ல.கார்த்திக்