ஏழ்மையில் கற்கை

சிறு இல்லத்தில் பல இன்னல்கள்-இவன்
உள்ளத்தில் ஒரே உந்துதல்தான் ஏனோ ?

எத்தனை எத்தனை இறைவன் –இவன்
இல்லத்தின் மூலையில் முடங்கியது ஏனோ ?

படிக்காதவன் பகலுக்கு பகலவன் –இவன்
படிப்பதற்க்கு இரவில் உதிக்காதது ஏனோ ?

வானொலியும் காணொளியும் சிந்தைவிலக்கும்
வேளையிலே இவன் பாடம்படிக்க பரிதவித்தது ஏனோ ?

எள்ளினகையாட எவருமில்லா நேரத்திலே
நள்ளிரவில் தெருவிளக்கை தேடிபோனதேனோ ?

ஆந்தை மட்டும் இங்கு அலறுவதேனோ இக்கனம்
இவனிதயம் நடுநிசியில் நடுங்குவதேனோ ?

ஒருகையில் பாடநூல் விழிகளுக்கு சிந்தையிலோ
நேற்று இவ்வழி கடந்து போன பாடைபோல் தானோ ?

நள்ளிரவில் அவட்டை ஒன்றும் அலைகிறதாம்
அதன் கரத்தில் எழுதுகோல் ஒன்றை அறிவாரோ ?

நிழலும் நானும் குறுக்குமருக்காய் நடந்தவாறே
படித்து முடித்ததும் எதுவோ படபடக்கும் மனதோடே ?

சலனமில்லா இரவினிலே சற்றும் ஒலி காணலியே
இதயத்துடிப்பை அறிகின்றேன் நூலில் அதனை படித்தவாறே !

விடிந்து போனதை கூறிவிட்டு எழுந்து வந்த சேவளிடம்
இரவில்பகல் கொடுத்த இறைவன் எடிசன் என அறிவாயோ
எந்தன் படிப்பின் அருமை புரிவாயோ என்று கிளம்பிவிட்டேன் பள்ளிக்கு !!!

*****************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (6-Jan-16, 10:23 am)
Tanglish : ezhmayil karkai
பார்வை : 718

மேலே