அவளுக்கா

அவளுக்காய்.......
---------------------------
கடைசி நேரத்தில்
காதல் கவிதைகளாய் நான்
கட்டியணைக்கையிலே.....
சிரித்து நீ மகிழ்கின்றாயே...!
சிறிது சிறிதாய் சாவதை அறியாமல்.

இதயத்தைக் கொடுத்த பின்பா...?
இதய நோய் வரவேண்டும் .....
உதயமாய் வளர்கையிலா...?
உதிர்ந்து நீ போக வேண்டும்......
மருத்துவப் படிப்பு நீ படித்தும்
மருத்துவம் உன்னைப் படிக்கிறதே....!
மனதுக்குள் வந்து புகுந்த பின்பும்
சிரித்து மகிழ முடியல்லையே....
HEART யும் கழற்றி திருத்திருப்பேன்...
HARD WARE பொருளாய் இருந்திருந்தால்....
கைவைக்க முடியல்லையே ......
காதல் அதில் புகுந்ததினால்
****************************
இறைவா.....!
மரணத்தைக் கூட மகிழ்ச்சியாய்
வரவேற்கும் இவளை....
என்னோடு வாழ விடு
இல்லையேல்........
அவளோடு என்னை சாகவிடு.......

எழுதியவர் : மாரி சிவா (14-Jan-16, 1:46 pm)
பார்வை : 162

மேலே