கண்ணீருக்கு தெரியவில்லை

என்னவனே
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!

இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!

^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Jan-16, 7:17 pm)
பார்வை : 622

மேலே